‘அறிவித்தல்’
மறுமலர்ச்சி மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி மன்றத்தின் அறிவிப்புக்கள், செய்திகள், அறிக்கைகள், தகவல்களை வெளியிடுவதற்கான உத்தியோக பூர்வமான இணையத்தளம் இப் புதுவருட நன்னாளில் இருந்து பரீட்சார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
வெகு விரைவில் இதன் உருவாக்கச் செயற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறப்பானதொரு இணையத்தளமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது கிராமத்தின் அபிவிருத்தியில் மைல் கல்லாக அமைகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் மாபெரும் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு மேலும் அணிசேர்க்கும் வகையில் இவ் இணையத்தளம் எமது கிராமத்தின் அனைத்து மக்களுக்குமிடையில் உறவுப் பாலமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்ற இணையத்தளத்திற்குச் செல்ல:
http://www.marumalarchy.org/
இந்தியாவின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகரும் இசைக் கலைஞருமான டி.எம் சௌந்தரராஜன் இன்று(25.05.13) பிற்பகல் சென்னையில் மரணமடைந்தார்.
Read the rest of this entry »

எனது வீட்டு மாடு ஏன் அம்மா என்று தாய் மொழி தமிழில் கத்துகிறது என்பதுதான் என் சந்தேகம் ? Read the rest of this entry »
தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடலும் பரிசில் வழங்கல் நிகழ்வும்.
எமது கிராமத்தில் (பனிப்புலம், காலையடி, காலையடி தெற்கு, செருக்கப்புலம், செட்டிகுறிச்சி, சாந்தை, குஞ்சன் கலட்டி, கலட்டி) தற்போது தரம் 5 இல் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 13.11.2012 (செவ்வாய்) பி.ப 4 மணியளவில் மறுமலர்ச்சி மன்றத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது. Read the rest of this entry »
அன்னாரின் தகனக்கிரிகை நடந்த தினத்தன்று மறுமலர்ச்சி மன்றத்தால் எமது ஊரில் வெளியிடப் பெற்ற அஞ்சலி பிரசுரம் எமது கையில் தற்பொழுதே கிடைக்கப் பெற்றுள்ளது.
பணிப்புலம் சனசமூகநிலைய நிர்மாண வேலை ஆரம்ப நாளன்று ஆலயத்தை இன்று நடத்துபவர்கள் ஆரம்ப வேலையை ஆரம்பிக்க தடை போட்டனர். அவர்கள் வாசிகசாலை நிர்வாகம் தங்களுக்கு வாடகை கட்டும்படி வற்ப்புறுத்திய போதும் பொதுமக்களும் நிர்வாகமும் மறுத்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் 500 ரூபா ஆலயத்துக்கு திருவிழாவுக்கு அன்பளிப்பு தருவதாய் ஒப்பந்தமானது. இதன்படி கடிதம் வழங்கப்பட்டது. இதன் பின்னரே வேலைகள் ஆரம்பமாகியது. வேலைகளை தொடங்கி தொடர இருக்கும் இந்நிலையில் மீண்டும் புதிய ஒரு தடை போட ஆலயத்தின் தற்போதைய உரிமையாளர்கள் என கூறுபவர்கள் பிரதேச சபைக்கு ஒரு சமாதான நீதவனின் உதவியுடன் சென்று தங்கள் கோயில் வளவுக்குள் பொதுமக்கள் வாசிகசாலை கட்டுவதாயும் தங்களின் நிலத்தை அபகரிப்பதாயும் ஒரு புகார் அளித்துள்ளனர்………………… Read the rest of this entry »
கடந்த 19.06.2011. அன்று இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற ஒன்று கூடலில்எமது இத்தாலி வாழ் எமது ஊர் மக்கள் அனைவரும் இணைந்து ஒரு ஒன்றியம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு பண் மக்கள் ஒன்றியம் என்ற பெயர் சூட்ட பட்டது, மேலும் பல தரப்பட்ட விடயங்கள் கலந்து உரையாட பட்டது,ஒன்றியத்தின் இந் நிகழ்வில் தலைவராக ர.ரவிந்த்திரனையும், செயலாளராக ச.விக்னேஸ்வரனையும் , பொருளாளராக சிந்துஜனும் தெரிவு செய்யபட்டனர். பின் ஆலோசராக கோணேஸ்வரன், ஜெயக்குமார், வேல்முருகன், சிங்கராசா, தேவகுசன், ரெங்கன், சங்கர் ஆகியோர் பின் ஆலோசராக தெரிவு செய்யப்பட்டனர்.