‘சிந்திப்பவன்’
ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினமாக அழைக்கப்பட்டு வருவதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் ஏற்புடைத்ததாக விளங்குகின்ற காரணத்தை முதலில் கவனிப்போம்.16ம் நூற்றாண்டுவரை ஐரோப்பியாவின் பல தேசங்களில் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தன. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜீலியன் ஆண்டுக் கணிப்பு முறையைப் புறம் தள்ளி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி மாதம் முதலாம் திகதியன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.எனினும் இந்தப் ‘புதிய’ புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. Read the rest of this entry »
![]() சாமியார் அவளைப் பார்த்து புன்னகை புரிந்தார்.
அவளிடம் மருந்துள்ள ஒரு பாட்டிலை நீட்டி, “”இதிலே இனிப்பு மருந்து உள்ளது. உன் கணவர் உன்னிடம் கோபமாகப் பேசும்போது நீ இந்த மருந்தை வாயில் ஊற்றிக் கொண்டு விழுங்கிவிடாமல் சிறிது நேரம் இரு. அவர் கத்தி முடித்ததும் மருந்தை விழுங்கி விடு. எல்லாம் சரியாகிவிடும்” என்றார் சாந்தமாக. Read the rest of this entry »
|
மறு பிறப்பு உண்டா இல்லையா? கடவுள் என்று ஒருவர் இருக்கின்றாரா? போன்ற கேள்விகளிற்கான பதில்கள்; உறுதி செய்யப்பட இயலாதவை. ஆனால் அவற்றை உணரவோ, ஊகிக்கவோ அல்லது அனுமானிக்க மட்டுமே இயலும். கடவுள், மறு பிறப்பு போன்றவை இல்லை எனப் பலமாக , பல காலமாக பலர் பேசியும் உரைத்தும் வருகிறபோதும் இவற்றை நம்பும் ஒரு சாரார் தொடர்ந்தும் இருந்து கொண்டேயிருக்கின்றனர். இது தொடர்பில் இன்றைய விஞ்ஞான அறிவியல் உயர் மட்டத்தில் உள்ளவர்களின் முடிவுகளையே நாமும் எற்க வேண்டியுள்ளது. Read the rest of this entry »
கருத்துச் செறிவும் இன்ப ரசனையும் மிக்கவை கிராமியப் பாடல்கள். தம் மனதில் உதித்தவற்றை அல்லது கேள்விப் பட்டவற்றை வைத்துக்கொண்டே பாடல்களை இராகத்தோடு இசைத்துப் பாடும் பாரம்பரியம் கிராமியத் தமிழ் மக்களிடம் நிலவிவந்த பண்டைய இலக்கிய மரபு எனலாம். இசை வடிவங்களின் தோற்றுவாய் கிராமப் புறங்களாகவே இருந்துள்ளன. பாடல்களும் ஆடல்களும் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கிராமிய மக்களால் பின்பற்றப் பட்டு வந்துள்ளன. ஈழத்திலும் கிராமிய இசைவடிவங்கள் பல்வேறு வடிவங்களில் ஆடல் பாடல் இணைந்தவை யாகவும் செய்திகளை வெளிக்காட்டுவன வாகவும் அமைந்துள்ளன. மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் வகையிலே கிராமியப் பாடல்கள் யதார்த்தமானவையாக வும் உண்மைத் தன்மையானவையாகவும் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுந் திறன் மிக்கவையாகவும் அமைந்துள்ளன.
Read the rest of this entry »
பல நூறு ஆண்டுகளாகவே ஜப்பானில் தலைவணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. வரவேற்பு, வழியனுப்பல், மரியாதையைக் காட்டல், மன்னிப்புக் கோருதல், தன்னடக் கத்தைக் காட்டல், புரிதலை உணர்த்தல், அனுமதியைத் தெரிவித்தல், இப்படி ஒரே தலையை தாழ்த்துவதன் மூலம் எல்லாவித மான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவது ஜப்பானியர்களின் பழக்கம். எப்பொழுது இந்தப் பழக்கம் தொடங்கியது என்று அறுதி யிட முடியாது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஏனென்றால், இது மிருகங்களிடமும் காணப்படுகிறது. பல குரங்குகள் பலம் வாய்ந்த குழுத்தலைவனைக் கண்டதும் தலை தாழ்த்துகின்றன என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக் கிறது. எப்பொழுது, எப்படி, ஏன், எதற்காக இந்த வழக்கம் தோன்றியது
தமிழர் என்றால் யார்?
அவர்களை எப்படி இனம் காணலாம்?
‘அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,’ என்று பட்டென சொல்ல தோன்றினால், ‘அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?’ ‘வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?’ Read the rest of this entry »
கடவுள் உண்டா? இல்லையா? அவர் எப்படி இருக்கிறார் ? எங்கே இருக்கிறார்.இவன் என்னடா அலம்புகிறான்.விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூட நம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம்கொள். ஏன் எப்படி எதற்க்காக என்று பலகேள்விகள் உன்னுக்குள் வரட்டும்.எப்பொருள் யார்,யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு .கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இலகுவாக சொல்லலாம் கடவுள் ,இல்லை ,இல்லை என்று சொல்லலாம். Read the rest of this entry »