ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார். அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் வாசகர்களே…
ஜெயராஜ் சின்னத்துரை
காயுதன் , முதல்ல எங்கட குடும்பத்த நல்லா வச்சுகொண்டு , பிறகு
சமுதாயத்த பற்றி சிந்திக்கலாம் எண்டு நான் நினைக்கிறேன் . நீங்க???
நல்ல ஒருகருத்து விட்டுக்கொடுப்பவன் அறிவாளி குடும்ப வாழ்வுக்கு சரி சமூகவாழ்வுக்கு…?
இனிமேலாவது திருந்துந்கோடா. நல்லதொரு கருத்து
நன்றி ஜெயராஜா