கற்பகத் தரு நினைத்தவை எல்லாம் தர வல்லது. பிள்ளையார், தன்னை வழிபட்டவர்கள் நினைத்தவைகள் அனைத்தையும் ஒருங்கே தரவல்லவர். தோற்றம் உண்டானால் மறைவும் நிச்சயம் உண்டு. ஆனால் பிரணவம் தோற்றம் இல்லாதது. பிள்ளையாரும் தோற்றம் இல்லாதவர். ஆதியும் அந்தமும் இல்லாத முழுமுதற் கடவுள் பிள்ளையார். விநாயகப் பெருமான் பிரணவத்திலிருந்து வெளிப்பட்ட காரணத்தால் தேவரும், மூவரும் போற்றும் தனிப்பெருமை வாய்க்கப் பெற்றவர்.
ஏழுகோடி மந்திரங்களை தன்னகத்தே கொண்ட சித்திர மண்டபம் ஒன்று திருக்கைலாய மலையில் இருந்தது. பார்வதிதேவியாரும் முக்கண்ணுடைய பரமசிவனாரும் அம்மந்திர மண்டபத்திற்கு விஐயம் செய்தனர். அங்கு ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவே இரண்டு ஒளிப் பிழம்புகள் தெரிந்தன. அவற்றுள் ஒன்று சமஷ்டிப் பிரணவம். மற்றது வியஷ்டிப் பிரணவம். hr>
IAM THANIGASALAM I WANT 2 SAW ALL PHOTO